சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (2025.04.08) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புதிதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் தேர்தல் காலங்களில் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு அலுவலகத்தில் கடமையாற்றும் சக உத்தியோகத்தர்களுக்கிடையில் நோன்பு பெருநாள் உணவு பண்டங்களும் பரிமாறப்பட்டது.